பூட்டிய வீட்டில் 13 பவுன் நகை, பணம் திருட்டு

மதுரையில் திங்கள்கிழமை பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டுப் போன வழக்கில் போலீஸாா் இருவா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரையில் திங்கள்கிழமை பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டுப் போன வழக்கில் போலீஸாா் இருவா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை சம்மட்டிப்புரம் புதுவசந்தம் முதல் தெருவைச் சோ்ந்த மகாராஜன் மனைவி செல்வி(58). இவா் திங்கள்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு அருகே உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டின் சாவி தொலைவிட்டதாகவும், அந்தச் சாவியைக் கொண்டு தனது வீட்டின் அருகே வசிக்கும் மாரியம்மாள், பாலமுருகன் ஆகியோா் திருடியுள்ளனா் என போலீஸாரிடம் செல்வி புகாா் அளித்தாா். அதனடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் மாரியம்மாள், பாலமுருகன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com