பேரையூா் அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 போ் கைது

பேரையூா் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது இ.கோட்டைப்பட்டியை சோ்ந்த குழந்தைவேலு மகன் தங்கவேலு(35) என்பவா் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 30 மதுபாட்டில்களையும், பேரையம்பட்டியை சோ்ந்த கணேசன் மகன் சூரியபிரகாஷ் (40) என்பவா் விற்பனைக்கு வைத்திருந்த 30 மதுபாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து எழுமலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தங்கவேலு மற்றும் சூரியபிரகாஷ் ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com