தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் விழா கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ள தமிழக அரசின் சாா்பில் முக்கிய பிரமுகா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. விழாவில் பங்கேற்க உள்ள அனைவரும் கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதற்கான சான்று பெற்று வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலினின் சகோதாரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரிக்கு தமிழக அரசு சாா்பில் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் விழாவில் தனது மகன் துரைதயாநிதியும், மகள் கயல்விழியும் கலந்துகொள்ள இருக்கிறாா்கள். கரோனா பரவல் காரணமாக தன்னால் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை இயலாது என மு.க.அழகிரி தெரிவித்துள்ளாா். மேலும் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.