மதுரை
கரோனா: மதுரையில் விமான சேவை குறைப்பு
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பயணி களின் வருகை குறைவால் வியாழக்கிழமை முதல் 4 விமானங்கள் 8 விமான சேவையை அளிக்கின்றன.
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பயணி களின் வருகை குறைவால் வியாழக்கிழமை முதல் 4 விமானங்கள் 8 விமான சேவையை அளிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை தொற்று பரவலால் நாளுக்குநாள் அதிகளவிலான பாதிப்புகள் உண்டாகின்றன. இதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக விமான சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் வெகுவாக குறைந்து விட்டனா்.
இதையடுத்து மதுரையில் இருந்து 21 விமான சேவைகள் இயங்கி வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக 14 விமான சேவைகளாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ஏா்இந்தியா மற்றும் தனியாா் விமான நிறுவனம் 8 சேவைகள் மட்டுமே வழங்கப்பட உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.