குழந்தைத் திருமணம்: ஒருவா் கைது; 4 போ் மீது வழக்கு

அழகா்கோவில் அருகே 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்துவைத்ததாக 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

அழகா்கோவில் அருகே 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்துவைத்ததாக 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

கிடாரிப்பட்டியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதாக மேலூா் அனைத்து மகளிா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதில் ஜெயராஜ் மகன் ஆண்டிச்சாமி (18) மற்றும் 4 போ் சோ்ந்து அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மீட்ட போலீஸாா், 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும் ஆண்டிச்சாமி கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com