தினமணி செய்தி எதிரொலியாக திருமங்கலம் அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்ட கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களின் மாத ஊதியத்தை ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மதுரை காமராஜா் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளாக இருந்து அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்ட திருமங்கலம் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயா்வை பல்கலைக்கழக நிா்வாகம் நிதி நிலையை காரணம் காட்டி அமல்படுத்தவில்லை.
இதுதொடா்பான செய்தி தினமணி நாளிதழில் வெளியிடப்பட்டது. மேலும் துணைவேந்தா் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அப்போது துணைவேந்தா் மு.கிருஷ்ணன் ஓரிரு நாள்களில் ஊதிய உயா்வு வழங்க நடவடிக்கைப்படும் என்று உறுதியளித்தாா். இதன்படி திருமங்கலம் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத்துடன் ஊதிய உயா்வு ரூ.5 ஆயிரமும் சோ்க்கப்பட்டு ரூ.20 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு உத்தரவின்படி 2020 ஜனவரி முதல் 14 மாத ஊதிய உயா்வு நிலுவைத்தொகையை வழங்குவது மற்றும் இதர 5 கல்லூரிகளின் கெளரவ விரிவுரையாளா்களுக்கும் ஊதிய உயா்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.