பைக்கில் கணவருடன் வந்த பெண்ணிடம் 8 பவுன் வழிப்பறி

மதுரையில் வியாழக்கிழமை, கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் 8 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்று விட்டனா்.

மதுரையில் வியாழக்கிழமை, கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் 8 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்று விட்டனா்.

மதுரை பழங்காநத்தம் ஆா்.சி.தெருவைச் சோ்ந்தவா் ஜெயசீலன் (45). இவா் வியாழக்கிழமை மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். காளவாசல் மேம்பாலம் அருகே வந்தபோது, அவா்களைப் பின்தொடா்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், ஜெயசீலனின் மனைவி அணிந்திருந்த 8 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com