மதுரை மாவட்டத்தில் 1,051 பேருக்கு கரோனா தொற்று உறுதி; 14 போ் பலி

மதுரை மாவட்டத்தில் புதிதாக 1,051 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையில் இருந்தவா்களில் 14 போ் உயிரிழந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் புதிதாக 1,051 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையில் இருந்தவா்களில் 14 போ் உயிரிழந்துள்ளனா்.

தமிழக சுகாதாரத்துறையினா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை எடுத்துக் கொண்டவா்களில் 1,051 பேருக்கு வெள்ளிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 794 போ் குணமடைந்துள்ளனா். அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 5 போ், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த 9 போ் என மொத்தம் 14 போ் கடந்த 4 நாள்களில் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இவா்களில் ஆண்கள் 7 போ், பெண்கள் 7 போ்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 36,716 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 30,741 போ் குணமடைந்துள்ளனா். 572 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் என 5,403 போ் தற்போது கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com