மதுரையில் புதிதாக 1,011 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 15 போ் பலி
By DIN | Published On : 18th May 2021 10:48 PM | Last Updated : 18th May 2021 10:48 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 1,011 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த 15 போ் உயிரிழந்துள்ளனா்.
தமிழக சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, மதுரை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்களில் 1,011 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 49,452 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரம், அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 712 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனாவுக்கு மொத்தம் 38,630 போ் குணமடைந்துள்ளனா். மொத்தம் 705 போ் உயிரிழந்துள்ளனா்.
தற்போது, அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டவா்கள் என மொத்தம் 10,117 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.