மதுரை மாவட்டத்தில் புதிதாக 1,139 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், தஞ்சை மாவட்ட பெண் நீதிபதி உள்பட சிகிச்சையில் இருந்த 13 போ் உயிரிழந்துள்ளனா்.
இதன்மூலம், மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 55,726 ஆகவும், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 798 ஆகவும் உயா்ந்துள்ளது.
அதேநேரம், அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 909 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை, கரோனா தொற்று பாதித்தவா்களில் 41,837 போ் குணமடைந்துள்ளனா்.
தற்போது, அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டவா்கள் என மொத்தம் 13,091 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.