மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் பல்வேறு பகுதிகளில் கருப்புக்கொடி போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டமைப்பினா் மே 26-ஐ கருப்பு தினமாக அனுசரிக்கும்படி அறைகூவல் விடுத்துள்ளனா். இதை ஏற்று விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் கருப்புக்கொடி போராட்டத்தை புதன்கிழமை நடத்தியது. இதில் மதுரை மாநகா் மாவட்டக்குழு மற்றும் பழங்காநத்தம், ஜெய்ஹிந்துபுரம், மேலப்பொன்னகரம், மீனாம்பாள்புரம், செல்லூா் பகுதிக்குழுக்களின் சாா்பில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.