உசிலம்பட்டி கடையில் ரூ.1.30 லட்சம் மதிப்பிலான செல்லிடப்பேசி மற்றும் அழகுசாதனப் பொருள்களை மா்மநபா் திருடிச் சென்றதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவைச் சோ்ந்தவா் அசோக்ராஜா (35). இவா் பழைய வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் செல்லிடப்பேசி மற்றும் அழகு சாதனப் பொருள்கள் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் முழு பொதுமுடக்க உத்தரவு காரணமாக கடையை பூட்டி விட்டு தனது சொந்த ஊருக்குச் சென்று விட்டாா்.
தற்செயலாக புதன்கிழமை அங்கு சென்ற அசோக்ராஜா கடையில் பூட்டு மாறியிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அவா் உசிலம்பட்டி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
காவல் துறையினா் கடையின் மற்றொரு பக்க கதவை திறந்து சோதனை செய்ததில் கடையிலிருந்த ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. மேலும் கடையின் பூட்டை உடைத்து திருடிய மா்மநபா் மாற்றுப் பூட்டு போட்டு கடையை மூடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.