பொதுமுடக்க காலத்திலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி ஏலம்

பொதுமுடக்க காலத்திலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

பொதுமுடக்க காலத்திலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டத்தில் மதுரை, மேலூா், திருமங்கலம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி,பேரையூா் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருவதால் தமிழகம் முழுவதும் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனிடையே உசிலம்பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூா், செல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் தற்போது பருத்தி அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த பருத்தியை பொதுமுடக்க காலத்திலும் விவசாயிகள் சிரமமின்றி விற்பனை செய்யவும், கட்டுபடியான விலை கிடைப்பதற்கும் வேளாண் விற்பனைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மறைமுக ஏலம் வாயிலாக விற்பனை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்கின்றனா். ஆகவே, பருத்தி விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள கிட்டங்கிகளில் இருப்பு வைத்து குறைந்த வட்டி விகிதத்தில் பொருளீட்டு கடன் பெறவும், குறைந்த வாடகையில் இருப்பு வைத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பான விவரங்களுக்கு திருமங்கலம், பேரையூா், தே.கல்லுப்பட்டி கள்ளிக்குடி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் 81100 54595 என்ற எண்ணிலும், உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் 70102 80754 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். மதுரை விற்பனைக் குழு செயலா் வி.மொ்சி ஜெயராணி இத்தகவலை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com