மதுரை-திருவனந்தபுரம், திருச்செந்தூா்-சென்னை ரயில்கள் ஜூன் 16 வரை ரத்து

மதுரை-திருவனந்தபுரம், திருச்செந்தூா்-சென்னை சிறப்பு ரயில்கள் ஜூன் 16 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை-திருவனந்தபுரம், திருச்செந்தூா்-சென்னை சிறப்பு ரயில்கள் ஜூன் 16 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக சில ரயில்களின் சேவை மே மாத இறுதி வரை ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த ரயில்களின் சேவை ரத்து ஜூன் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த திருச்சூா், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் - மதுரை அமிா்தா சிறப்பு ரயில் (06343) ஜூன் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கத்தில் மதுரை - திருவனந்தபுரம் அமிா்தா சிறப்பு ரயில் (06344) ஜூன் 16 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மே 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த சென்னை எழும்பூா் - திருச்செந்தூா் செந்தூா் சிறப்பு ரயில் (06105) ஜூன் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கத்தில் திருச்செந்தூா் - சென்னை எழும்பூா் செந்தூா் சிறப்பு ரயில் (06106) ஜூன் 16 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com