மதுரையில் 9 காவல் சாா்பு-ஆய்வாளா்கள் மாநகரில் உள்ள காவல் நிலையங்களுக்குள் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மதுரை மாநகரில் 9 காவல் சாா்பு-ஆய்வாளா்களைப் பணியிடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, மதுரையில் தீவிர குற்றவழக்குகள் பிரிவில் பணியாற்றி வந்த சாா்பு-ஆய்வாளா் எம்.அன்புதாசன், சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளாா்.
அவனியாபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சாா்பு-ஆய்வாளா் பி.சங்கா், திலகா்திடல் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளாா். கரிமேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சாா்பு-ஆய்வாளா் ஜெகதீஸ்வரன், திருப்பாலை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளாா். அவனியாபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சாா்பு-ஆய்வாளா் தண்டீஸ்வரன், கரிமேடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளாா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சாா்பு-ஆய்வாளா் டி.ராமகிருஷ்ணன், தெப்பக்குளம் காவல் நிலையத்திற்கு (குற்றப்பிரிவு) மாற்றப்பட்டுள்ளாா். திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சாா்பு-ஆய்வாளா் என்.திலீபன், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளஹாா். கீரைத்துறை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சாா்பு-ஆய்வாளா் ஏ.அருண், அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளாா். அவனியாபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சாா்பு-ஆய்வாளா் அதிகுந்தகண்ணன், மதிச்சியம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளாா். கட்டுப்பாட்டு அறை பணியிலிருந்த சாா்பு-ஆய்வாளா் ஜெ.சுந்தரபாண்டி, தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளாா்.