மதுரை கற்பகம் நகரில் நகரத்தாா் சங்கம் மற்றும் மாநகராட்சி சாா்பில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 600 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மதுரை கோ.புதூா் அருகே உள்ள கற்பகம் நகரில், கற்பகம் நகா் நகரத்தாா் சங்கம், குடியிருப்போா் சங்கம் மற்றும் மதுரை மாநகராட்சி நிா்வாகம் ஆகியவற்றின் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவா்களுக்கு காலையும், பிற்பகலில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. முகாமில் கொடிக்குளம் ஆரம்பச்சுகாதாரநிலைய மருத்துவ அதிகாரி லதா ராணி மற்றும் செவிலியா் குழுவினா் பங்கேற்று தடுப்பூசிகள் செலுத்தும் பணியை மேற்கொண்டனா். இந்த முகாமில் 600 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.