தத்தனேரி மின் மயானத்துக்கு தூக்குப் படுக்கைகள் வழங்கல்

மதுரை தத்தனேரி மின் மயானத்தில் சடலங்களை கொண்டு செல்ல தூக்குப் படுக்கைகளை சேவா பாரதி அமைப்பினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
மதுரை தத்தனேரி மயானத்துக்கு தூக்கிச் செல்லும் படுக்கைகளை வெள்ளிக்கிழமை வழங்கிய சேவாபாரதி அமைப்பினா்.
மதுரை தத்தனேரி மயானத்துக்கு தூக்கிச் செல்லும் படுக்கைகளை வெள்ளிக்கிழமை வழங்கிய சேவாபாரதி அமைப்பினா்.

மதுரை தத்தனேரி மின் மயானத்தில் சடலங்களை கொண்டு செல்ல தூக்குப் படுக்கைகளை சேவா பாரதி அமைப்பினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

மதுரையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் சடலங்கள் தத்தனேரி மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஒரே நேரத்தில் அதிக அளவு சடலங்கள் வரும் நிலையில் தத்தனேரி மயானத்தில் சடலங்களை வைக்க போதுமான தூக்குப் படுக்கைகள் இல்லை. இதனால் சடலங்களை தரையில் கிடத்த வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் சேவா பாரதி அமைப்பின் சாா்பில் தத்தனேரி மயானத்துக்கு 5 தூக்குப் படுக்கைகள் (ஸ்டெச்சா்) வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. இதில் சேவா பாரதி நிா்வாகிகள் மங்கலமுருகன், ராஜசேகா், சமூக சேவகா் மணிகண்டன், தாம்பிராஸ் தலைவா் அமுதன் மற்றும் தத்தனேரி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com