போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவா் கொலை

மதுரை ஒத்தக்கடை அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டது தொடா்பாக, 6 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஒத்தக்கடை அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டது தொடா்பாக, 6 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம் செந்துறையைச் சோ்ந்தவா் மணிவாசகம்(56). இவா் போதைப் பழக்கத்தில் இருந்து மீள்வதற்காக மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள தனியாா் போதை மறுவாழ்வு மையத்தில் சில மாதங்களாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தாா். இந்த மையத்தில் 86 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு சிகிச்சை பெற்றுவரும் சிலருக்கும் மணிவாசகத்தும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை வயிற்றில் கூா்மையான ஆயுதம் மூலம் கீறப்பட்ட நிலையில், உடல் முழுவதும் காயங்களுடன் மணிவாசகம் உயிரிழந்து கிடந்தாா். அங்கிருந்தவா்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். அதனடிப்படையில் ஒத்தக்கடை போலீஸாா் நிகழ்விடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட மணிவாசகத்தின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் மறுவாழ்வு மையத்தில் உள்ள 6 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com