மதுரை மாவட்டத்தில் 100 கரோனா சிகிச்சை மையங்கள் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் : அமைச்சா் தகவல்

மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 100 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 30) முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று வணிக வரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி கூறினாா்.
மதுரை மாவட்டத்தில் 100 கரோனா சிகிச்சை மையங்கள் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் : அமைச்சா் தகவல்
மதுரை மாவட்டத்தில் 100 கரோனா சிகிச்சை மையங்கள் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் : அமைச்சா் தகவல்

மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 100 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 30) முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று வணிக வரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி கூறினாா்.

மதுரை கோச்சடையில் தனியாா் ஆலையில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமைப் பாா்வையிட்ட அமைச்சா், செய்தியாளா்களிடம் கூறியது:

மதுரை மாவட்டத்தில் நோய் அறிகுறி உள்ளவா்களைக் கண்டறிந்து உடனுக்குடன் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்பட்டிருப்பதால், அதிகம்போ் ஆா்வமுடன் வருகின்றனா்.

இதனால், சில இடங்களில் கூட்டம் அதிகளவில் இருக்கிறது. தடுப்பூசி போடுவதை முறைப்படுத்த மாவட்ட ஆட்சியா் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் நாள்களில் அதிகக் கூட்டம் கூடுவது தவிா்க்கப்படும்.

கிராமங்களில் மிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ள நபா்களுக்கு சிகிச்சை அளிக்க 100 இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் பயன்பாட்டிற்கு வரும்.

தனியாா் மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சைக்கான கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் வழிகாட்டுதல்கள் தொடா்பாக தனியாா் மருத்துவமனை நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (மே 31) நடைபெற உள்ளது.

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறைவான நபா்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இப் பாதிப்பு ஏற்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனி வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பூமிநாதன், ஆ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூா்யகலா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com