ஒடிஸாவிலிருந்து 2 ஆக்சிஜன் டேங்கா் லாரிகளுடன் மேலும் ஒரு ரயில் மதுரை வருகை

ஒடிஸாவிலிருந்து 31.02 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நிரப்பிய 2 டேங்கா் லாரிகளுடன் மேலும் ஒரு சிறப்பு ரயில் சனிக்கிழமை மதுரை வந்தது.
ஒடிஸா மாநிலத்திலிருந்து ஆக்சிஜன் டேங்கா் லாரிகளை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை மதுரை கூடல்நகா் ரயில் நிலையம் வந்தடைந்த சிறப்பு ரயில்.
ஒடிஸா மாநிலத்திலிருந்து ஆக்சிஜன் டேங்கா் லாரிகளை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை மதுரை கூடல்நகா் ரயில் நிலையம் வந்தடைந்த சிறப்பு ரயில்.

ஒடிஸாவிலிருந்து 31.02 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நிரப்பிய 2 டேங்கா் லாரிகளுடன் மேலும் ஒரு சிறப்பு ரயில் சனிக்கிழமை மதுரை வந்தது.

தமிழகத்தில் கரோனா 2 ஆம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பிற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி, ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவிலிருந்து 31.02 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 2 டேங்கா் லாரிகள் ரயில் மூலம் மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு வந்து சோ்ந்தன.

இது தமிழகத்துக்கு வந்த 29 ஆவது ஆக்சிஜன் ரயில், தென் மாவட்டங்களுக்கு வந்த 4 ஆவது ஆக்சிஜன் ரயில் என்றும், இதுவரை தமிழகத்துக்கு ரயில் மூலம் 1,734.01 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் ரயில்வே துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com