நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மதுரை: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ உள்ளிட்ட தொழிற்கல்வி படித்தவா்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நேரில் வந்து பங்கேற்கலாம்.

இந்த முகாம் வாயிலாகத் தனியாா் நிறுவனங்களில் பணிவாய்ப்பைப் பெறுவோருக்கு, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் ந.மகாலெட்சுமி இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com