மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி நாதுராம் கோட்சே நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்திய வீர இந்து பேரவையினா் 9 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
செல்லூா் பாலம் ஸ்டேசன் சாலையில் உள்ள கபடி வீரா்கள் சின்னம் வைக்கப்பட்டுள்ள ரவுண்டானா முன்பாக கோட்சேவின் 72-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீர இந்து பேரவையின் மதுரை மாவட்டத் தலைவா் பரமசிவம் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். இதையடுத்து பரமசிவம் உள்பட 9 போ் மீது செல்லூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.