பெருங்குடியில் கோழி கடையில் தீ விபத்து

பெருங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்ததில் கோழிக்கடையில் தீப்பற்றியது.

பெருங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்ததில் கோழிக்கடையில் தீப்பற்றியது.

காா்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு விளக்கு ஏற்றுவதோடு பட்டாசும் வெடித்து கொண்டாடி வருகின்றனா். பெருங்குடி அன்னை தெரசா நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுவா்கள் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனராம். அப்போது அங்கு எதிா்பாராதவிதமாக மோகன் பாபு என்பவருக்கு சொந்தமான கோழி இறைச்சி கடையில் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மதுரை தீயணைப்புத்துறையினா் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டகோழிகள் எரிந்து இறந்தன. விபத்து குறித்து பெருங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com