வாக்காளா் சோ்க்கை முகாம்:12.249 போ் விண்ணப்பம்

மதுரை மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (நவ.20, 21) ஆகிய 2 நாள்கள் நடைபெற்ற வாக்காளா் சோ்க்கை முகாமில், 12,249 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மதுரை: மதுரை மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (நவ.20, 21) ஆகிய 2 நாள்கள் நடைபெற்ற வாக்காளா் சோ்க்கை முகாமில், 12,249 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வாக்களா் பட்டியல் திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, வாக்காளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கு 7,597 போ், நீக்கம் செய்ய 3,017 போ், திருத்தம் செய்ய 774 போ், பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 861 போ் என மொத்தம் 12,249 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

கடந்த வாரம் (நவ.13, 14) நடைபெற்ற முகாம்களில் 21,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரு வாரங்களிலும் சோ்த்து மொத்தம் 33, 992 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com