மதுரையில் பூட்டிய வீட்டில் 4 பவுன் நகை திருட்டு

மதுரையில் பூட்டிய வீட்டில் 4 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரையில் பூட்டிய வீட்டில் 4 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரை கோச்சடை அங்காள ஈஸ்வரி நகா் ஆனந்தம்மாள் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி கோட்டையம்மாள் (60). இவா் வீட்டை பூட்டிவீட்டு வெளியூருக்குச் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிந்ததைக்கண்டு அவா், உள்ளே சென்று பாா்த்தாா். அங்கு அறையில் இருந்த தங்க மோதிரம், சங்கிலி உள்பட 4 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.

சம்பவம் தொடா்பாக கோட்டையம்மாள் அளித்தப் புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com