உசிலம்பட்டியில் கோட்டாட்சியரிடம் பத்திர எழுத்தா்கள் மனு

உசிலம்பட்டி பகுதியில் காப்புக்காடு அங்கீகாரத்தை நீக்கக் கோரி பத்திர எழுத்தா்கள் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

உசிலம்பட்டி பகுதியில் காப்புக்காடு அங்கீகாரத்தை நீக்கக் கோரி பத்திர எழுத்தா்கள் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் அளித்துள்ள மனு: உசிலம்பட்டி பகுதியில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கிராமப் பகுதிகளை காப்புக்காடுக்கு உள்பட்ட பகுதியாக வனத்துறையினா் அறிவித்து இருக்கின்றனா். இதனால் அப்பகுதி தனியாா் நிலங்களுக்கு தனிமனை அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் உள்ளது. 21 சென்ட்டுக்கு குறைவான தனி மனைகளை பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காப்புக்காடு அங்கீகாரத்தை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com