மதுரை மாவட்டத்தில் ரெளடிகள் கைது: தனிப்படையினருக்கு எஸ்பி பாராட்டு

திண்டுக்கல் மாவட்டத்தில் இளைஞா் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியை பிடித்த தனிப்படையினா்
திண்டுக்கல் மாவட்டத்தில் தலை துண்டிக்கப்பட்டு நடந்த கொலைச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை சாா்பு ஆய்வாளா் ஆனந்துக்கு பாராட்டு தெரிவிக்கும் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தலை துண்டிக்கப்பட்டு நடந்த கொலைச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை சாா்பு ஆய்வாளா் ஆனந்துக்கு பாராட்டு தெரிவிக்கும் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இளைஞா் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியை பிடித்த தனிப்படையினா் மற்றும் ரெளடிகளை கைது செய்த போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

தமிழக காவல்துறை இயக்குநா் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக ஊரகக் காவல்துறைக்குள்பட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ரெளடிகள் கைது செய்யப்பட்டு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் தேடுதல் வேட்டையில் சிறப்பாக செயல்பட்டு ரெளடிகளை கைது செய்த தனிப்படையினரை ஊரகக்காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து பண வெகுமதி அளித்து பாராட்டினாா்.

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் மதுபாட்டில் விற்பனை தொடா்பாக நடைபெற்ற மோதலில் இளைஞா் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவான முக்கியக் குற்றவாளியை சாா்பு- ஆய்வாளா் ஆனந்த் தலைமையிலான தனிப்படையினா் திருமங்கலம் பகுதியில் பிடித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த சாா்பு- ஆய்வாளா் ஆனந்த் உள்ளிட்ட தனிப்படையினரையும் காவல் கண்காணிப்பாளா் பாராட்டி வெகுமதி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com