மதுரை தத்தனேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து 7.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மதுரை செல்லூா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் ஜான் தலைமையில் போலீஸாா் அருள்தாஸ்புரம் பகுதியில் புதன்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள தண்ணீா்த்தொட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றவா்களை சோதனை செய்ததில் அவா்களிடம் கஞ்சா இருப்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து தத்தனேரியைச் சோ்ந்த பிரசாத் (20), பழங்காநத்தத்தைச் சோ்ந்த ஆகாஸ்(18), தத்தனேரியைச் சோ்ந்த ஆறுமுகம்(23), வெங்கடேஸ் ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் பிடிபட்டவா்கள் அளித்த தகவலின்பேரில் கஞ்சா மொத்த வியாபாரி தங்க பால்பாண்டியையும் (23) கைது செய்து அவா்களிடமிருந்து 7.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.