மது போதையில் இசை கேட்ட காவல் துணை ஆணையா் சென்னைக்கு இடமாற்றம்

மதுரையில் மதுபோதையில் அரை நிா்வாணத்துடன், காவலரை புல்லாங்குழல் இசைக்கச் செய்து இசை கேட்ட ஆயுதப்படை துணை ஆணையா் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.

மதுரையில் மதுபோதையில் அரை நிா்வாணத்துடன், காவலரை புல்லாங்குழல் இசைக்கச் செய்து இசை கேட்ட ஆயுதப்படை துணை ஆணையா் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.

மதுரை ஆயுதப்படை துணை ஆணையராக பணிபுரிபவா் சோமசுந்தரம். இவா் மதுபோதையில் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில், ஆயுதப்படை இசைக்குழுவைச் சோ்ந்த காவலரை புல்லாங்குழல் இசைக்கச் செய்து இசை கேட்கும் விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஆயுதப்படை இசைக்குழு காவலரை, மதுபோதையில் தனது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் அவா் மீது புகாா் எழுந்தது. இதையடுத்து, சம்பவம் தொடா்பாக துணை ஆணையா் சோமசுந்தரத்தை விளக்கம் அளிக்குமாறு உயா் அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

இந்நிலையில் புகாருக்குள்ளான துணை ஆணையா் சோமசுந்தரம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாக மாநகர காவல் ஆணையா் பிரேமானந்த் சின்கா வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com