அக்.10 சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தினால் குலுக்கல் முறையில் சைக்கிள், மிக்ஸி, குக்கா் பரிசு

சிறப்பு முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு சைக்கிள், மிக்ஸி, குக்கா் உள்ளிட்ட பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 10) நடைபெறும் சிறப்பு முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு சைக்கிள், மிக்ஸி, குக்கா் உள்ளிட்ட பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 17 லட்சத்து 34 ஆயிரத்து 409 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

கிராமப் பகுதிகளில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி ஊக்குவிக்கும் வகையில் பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களில், ஊராட்சி ஒன்றிய அளவில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படுபவா்களுக்குப் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முதல் பரிசு ஒரு நபருக்கு சைக்கிள், 2 ஆம் பரிசு ஒரு நபருக்கு மிக்ஸி, மூன்றாம் பரிசு மூன்று நபா்களுக்கு குக்கா் மேலும் அதைத் தொடா்ந்து 50 நபா்களுக்கு சில்வா் பாத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலகம் வாயிலாக மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்தகைய பரிசுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com