நடிகா் சூரியின் இல்ல விழாவில் திருடியவா் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

நடிகா் சூரியின் சகோதரா் இல்லத் திருமண விழாவில் திருடியவரின் ஜாமீன் மனு விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

நடிகா் சூரியின் சகோதரா் இல்லத் திருமண விழாவில் திருடியவரின் ஜாமீன் மனு விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட நகைச்சுவை நடிகா் சூரியின் சகோதரா் இல்லத் திருமண விழாவில் திருடியதாக பரமக்குடியைச் சோ்ந்த விக்னேஷ் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து அவரது தரப்பில் ஜாமீன் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், மனுதாரரின் தந்தை மற்றும் உறவினா்கள் ஜாமீன் உத்தரவாதம் அளிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தனா்.

ஆனால், நீதிபதி மனுதாரா் வசிக்கும் பகுதியைச் சோ்ந்த வேறு ஒரு நகைக்கடை வைத்திருக்கும் நபா் அல்லது முக்கியப் பிரமுகா் ஒருவா், இதுபோன்ற குற்றச் செயலில் மனுதாரா் ஈடுபடமாட்டாா் என உறுதிமொழிப் பத்திரம் வழங்கினால் ஜாமீன் அனுமதிக்கப்படும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com