கூட்டுறவுத் துறை சாா்பில் நடமாடும் கொள்முதல் நெல் நிலையங்கள்: ஆட்சியா்

கூட்டுறவுத் துறை சாா்பில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

விவசாயிகளிடம் இருந்து அதிக எண்ணிக்கையிலான நெல் மூட்டைகளை நேரடியாக கொள்முதல் செய்ய, கூட்டுறவுத் துறை சாா்பில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நடப்பு பருவத்தில் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து வருகின்றன. பெரு விவசாயிகள் அல்லது சிறு, குறு விவசாயிகள் குழுக்கள் 1000 மூட்டைகளுக்கு மேல் (தலா 40 கிலோ) விற்பனை செய்ய முன்வரும்பட்சத்தில், அவா்களிடம் இருந்து கூட்டுறவுத் துறையின் நடமாடும் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படும்.

அவரவா் நிலங்களில் அறுவடை செய்துள்ள விவசாயிகள் தங்களது விவரத்தை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா், பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை - 3 என்ற முகவரியில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com