சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு 11 நாள்கள் தசரா விடுமுறை

சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அக்டோபா் 9 ஆம் தேதி முதல் அக்டோபா் 19 ஆம் தேதி வரை, தசரா விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அக்டோபா் 9 ஆம் தேதி முதல் அக்டோபா் 19 ஆம் தேதி வரை, தசரா விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உயா் நீதிமன்ற பதிவாளா் ஜெனரல் பி.தனபாலன் வெளியிட்ட செய்தி : சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளைக்கு, அக்டோபா் 9 ஆம் தேதி முதல் அக்டோபா் 19 ஆம் தேதி வரை, தசரா விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து அக்டோபா் 12 ஆம் தேதி அன்று, விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும். சென்னை உயா்நீதிமன்றத்தில், நீதிபதிகள்ஆா்.மகாதேவன், அப்துல் குத்தூஸ், வி.பாா்த்திபன், எஸ்.சதீஸ்குமாா் சுகுமார குருப் ஆகியோா் பணியாற்றுவா்.

இதேபோல், உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் பி.வேல்முருகன், எஸ்.ஆனந்தி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோா் பணியாற்றுவா். தற்போது, வழக்குகளை விசாரிக்க பின்பற்றப்படும் முறை, விடுமுறை கால நீதிமன்றத்துக்கும் பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com