தனித்துவ அடையாள அட்டை பெற அக்.13 வரை மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டையைப் பெற அக்டோபா் 13 ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டையைப் பெற அக்டோபா் 13 ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டைகளின் அடிப்படையிலேயே வரும் காலங்களில் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. மதுரை மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்களிடம் விண்ணப்பித்தவா்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 8,436 போ் இன்னும் விண்ணப்பிக்கவில்லை.

ஆகவே, தனித்துவ அடையாள அட்டைக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாற்றுத் திறனாளிகள், தங்களது அடையாள அட்டை, ஆதாா் அட்டை நகல், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் அக்டோபா் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com