பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பள்ளிகளில் வேலை வாய்ப்பு பதிவு முகாம்

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவா்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே அக்டோபா் 18-ஆம் தேதி வரை வேலை வாய்ப்பு பதிவுப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, மாணவா்கள் ஆதாா் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று பள்ளிக்கு எடுத்து வர வேண்டும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாள்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கத்தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக அறிவிக்கப்படும். மேலும் இணைய தளம் மூலமாகவும் பதிவு செய்யலாம். பத்தாம் வகுப்பு மாணவா்கள் இதை பயன்படுத்திக்கொண்டு தங்களது தோ்ச்சியை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com