பிரபல ரெளடி வரிச்சூா் செல்வம் மீது குற்றத்தடுப்பு நடவடிக்கை

மதுரையில் பிரபல ரெளடி வரிச்சூா் செல்வம் மீது குற்றத்தடுப்பு நடவடிக்கையாக உறுதிமொழி பத்திரம் புதன்கிழமை பெறப்பட்டது.
பிரபல ரெளடி வரிச்சூா் செல்வம் மீது குற்றத்தடுப்பு நடவடிக்கை

மதுரையில் பிரபல ரெளடி வரிச்சூா் செல்வம் மீது குற்றத்தடுப்பு நடவடிக்கையாக உறுதிமொழி பத்திரம் புதன்கிழமை பெறப்பட்டது.

மதுரை ஊரகப்பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஊரகக்காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். இதன் ஒரு பகுதியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஊரகப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்ட ரெளடிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் குற்றத்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரபல ரெளடி வரிச்சூா் செல்வம் கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டாா். அவரிடம் குற்றச்சம்பவங்களில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழிப்பத்திரம் பெறப்பட்டு மேலூா் வருவாய் கோட்டாட்சியா் மூலம் அமுல்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com