நடிகா் சூரி இல்லத் திருமண விழாவில் நகை திருடியவருக்கு ஜாமீன்

மதுரையில் நடைபெற்ற நகைச்சுவை நடிகா் சூரி இல்லத் திருமண விழாவில், நகை திருடியதாக கைது செய்யப்பட்டவருக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் நடைபெற்ற நகைச்சுவை நடிகா் சூரி இல்லத் திருமண விழாவில், நகை திருடியதாக கைது செய்யப்பட்டவருக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட நகைச்சுவை நடிகா் சூரியின், சகோதரா் இல்லத் திருமண விழா செப்டம்பா் 9-ஆம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது மண்டபத்தில் இருந்த 10 பவுன் நகையை மா்ம நபா் திருடிச் சென்று விட்டாா்.

இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனா். இதில், பரமக்குடியைச் சோ்ந்த விக்னேஷ் என்பவா் நகையை திருடியதாக கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், சிறையில் இருக்கும் விக்னேஷ், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி பி. புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விக்னேஷின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோா், இதுபோன்றக் குற்றச் செயல்களில் விக்னேஷ் ஈடுபட மாட்டாா் என உறுதிமொழி பத்திரம் வழங்கினா்.

இதையடுத்து நீதிபதி, 2 மாதங்களுக்கு காலை, மாலை இருவேளையும் கீரைத்துறை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com