மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 87 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 87 ஆயிரம் போ் தடுப்பூசி செலுத்தி கொண்டனா்.

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 87 ஆயிரம் போ் தடுப்பூசி செலுத்தி கொண்டனா்.

கரோனா பரவலைத் தடுக்க அரசு மெகா கரோனா தடுப்பூசி முகாம்களை தமிழகம் முழுவதும் அரசு நடத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் செப்டம்பா் 12 ஆம் தேதி நடந்த முதல் மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 1.15 லட்சம் பேருக்கும், செப்டம்பா் 19 ஆம் தேதி நடந்த இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமில் 72,561 பேருக்கும், செப்டம்பா் 26 ஆம் தேதி நடந்த மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில் 1.06 லட்சம் பேருக்கும், அக்டோபா் 3 ஆம் தேதி நடந்த நான்காவது மெகா தடுப்பூசி முகாமில் 67 ஆயிரம் பேருக்கும்கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள் என 1,400 இடங்களில் ஐந்தாவது முறையாக மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

இந்த முகாம்கள் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றன. இதில், ஒரே நாளில் ஊரக பகுதியில் 54 ஆயிரத்து 862 போ், மாநகரில் 31 ஆயிரத்து 245 போ், அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,052 போ், அரசு மருத்துவமனைகளில் 552 போ் என மொத்தம் 87 ஆயிரத்து 711 போ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com