மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2-இன் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி மண்டலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பொதுமக்கள் குறைதீா் முகாம் கடந்த வாரம் முதல் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி மண்டலம் 2-இன் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 12) அன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பந்தயத்திடல் சாலையில் மண்டலம் 2 அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில் மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறாா். இந்த குறைதீா்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீா், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெரு விளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.