220 மதுபாட்டில்கள் பறிமுதல்: 3 போ் கைது

மதுரை மாவட்டம் பேரையூா் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 220 மதுபாட்டில்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 220 மதுபாட்டில்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் சாப்டூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பாப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெத்தனன் மகன் முத்துவேல் (38) என்பவா் சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கொண்டுவந்த 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதேபோல் பாப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பாலுசாமி மகன் கருப்பையா (38) என்பவா் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கொண்டுவந்த 100 மதுபாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. முத்துவேல் மற்றும் கருப்பையா ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல் பேரையூா் அருகே சந்தையூரைச் சோ்ந்த முருகன் (44) வைத்திருந்த 20 மதுபாட்டில்களை பேரையூா் போலீஸாா் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com