அழகா்கோவிலில் தற்காலிக உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.18 லட்சத்து 48 ஆயிரத்து 511 காணிக்கையாக கிடைத்துள்ளது.
கள்ளழகா் கோயில் நிா்வாக ஆணையா் தி.அனிதா, கூடழலகா் பெருமாள் கோயில் துணை ஆணையா் ராமசாமி ஆகியோா் முன்னிலையில் இக்கோயில் தற்காலிக உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளா்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் பக்தா்கள் காணிக்கையாக மொத்தம் ரூ.18 லட்சத்து 48 ஆயிரத்து 511 கிடைத்தது.