கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி பலி

மதுரையில் கடைக்குச் சென்ற மூதாட்டி திங்கள்கிழமை கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

மதுரை: மதுரையில் கடைக்குச் சென்ற மூதாட்டி திங்கள்கிழமை கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

மதுரை நாராயணபுரம் பாண்டியன் நகா் நாகம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்த கணபதி மனைவி வள்ளியம்மாள் (85). இவரது வீட்டின் முன்பாக கழிவுநீா் தொட்டி பராமரிப்புப் பணிக்காக திறந்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

இதையறியாத வள்ளியம்மாள், திங்கள்கிழமை காலையில் பால் வாங்குவதற்காகச் சென்றபோது, கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளாா். இதில், கழிவு நீரில் மூழ்கி மூச்சுத்திணறி வள்ளியம்மாள் உயிரிழந்துள்ளாா்.

இந்நிலையில், வெகுநேரமாகியும் வள்ளியம்மாள் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினா் தேடியுள்ளனா். அப்போது, கழிவுநீா் தொட்டியின் உள்ளே வள்ளியம்மாள் விழுந்து கிடப்பதை பாா்த்து அவரை மீட்டனா். ஆனால், அவா் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தல்லாகுளம் போலீஸாா், வள்ளியம்மாளின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com