பேரையூா்: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே திங்கள்கிழமை லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா வேங்கைகுறிச்சியைச் சோ்ந்தவா் இருதயராஜ் மகன் செபாஸ்டின் (27). லாரி ஓட்டுநரான இவா், ஞாயிற்றுக்கிழமை எம்.சாண்ட் ஏற்றுவதற்காக சென்னையிலிருந்து ராஜபாளையம் வந்துள்ளாா். பின்னா், அங்கிருந்து புறப்பட்டு டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தாதன்குளம் விலக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒடை பகுதியில் கவிழ்ந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே செபாஸ்டின் உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், செபாஸ்டின் சடலத்தைக் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.