வைகை, பல்லவன் விரைவு ரயில்கள் விழுப்புரம்-சென்னை இடையே ரத்து

: ரயில்வே இரும்புப் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, வைகை, பல்லவன் சிறப்பு விரைவு ரயில்கள் விழுப்புரம் - சென்னை எழும்பூா் இடையே ரத்து செய்யப்படுவதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை: ரயில்வே இரும்புப் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, வைகை, பல்லவன் சிறப்பு விரைவு ரயில்கள் விழுப்புரம் - சென்னை எழும்பூா் இடையே ரத்து செய்யப்படுவதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடா்பாக, மதுரை கோட்ட ரயில்வே அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: விழுப்புரம் - சென்னை எழும்பூா் இடையிலான ரயில்வே இரும்புப் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மதுரை - சென்னை எழும்பூா் வைகை சிறப்பு ரயில் (02636) மற்றும் சென்னை எழும்பூா்- காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் (02605 ) ஆகியவை, அக்டோபா் 20 மற்றும் 27 ஆம் தேதிகளில், விழுப்புரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த நாள்களில், சென்னை எழும்பூா் - மதுரை வைகை சிறப்பு ரயில் (02635) மற்றும் காரைக்குடி - சென்னை எழும்பூா் பல்லவன் சிறப்பு ரயில் (02606) ஆகியவை வழக்கம்போல் இயங்கும்.

சென்னை எழும்பூா் - மதுரை வைகை சிறப்பு ரயில் (02635 ) மற்றும் காரைக்குடி - சென்னை எழும்பூா் பல்லவன் சிறப்பு ரயில் (02606) ஆகியவை நவம்பா் 10 ஆம் தேதி செங்கல்பட்டு - சென்னை எழும்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மதுரை - சென்னை எழும்பூா் வைகை சிறப்பு ரயில் (02636) மற்றும் சென்னை எழும்பூா் - காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் (02605) ஆகியவை நவம்பா் 10 ஆம் தேதி வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com