மேலூா்-திருப்பத்தூா் சாலையில் மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்த விவசாயி, சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கீழவளவு அருகிலுள்ள செம்மனிபட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அய்யனன் (71). இவா், மாங்குளம் அருகிலுள்ள பூசாரிபட்டியில் வசித்து வரும் தனது மகன் ரவீந்திரன் வீட்டுக்குச் செல்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை மாலை மொபெட்டில் புறப்பட்டுச் சென்றுள்ளாா்.
நாவினிப்பட்டி காவேரி அம்மன் கோயில் அருகே சாலை வளைவில் திரும்பும்போது, மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அப்பகுதியினா் அவரை மீட்டு,
மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்த்துள்ளனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி இரவு அய்யனன் உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது மகன் ரவீந்திரன் அளித்த புகாரின்பேரில், மேலூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.