மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்டுவது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவா் சிலைக்கு மாலையணவித்த அவா்
செய்தியாளா்களிடம் கூறுகையில், தேசியத் தலைவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி தினம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
தேசியத்தின் மீதும், தெய்வீகத்தின் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட அவரது
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது பெருமைக்குரியது.
இதையும் படிக்க- புதுச்சேரியில் ரௌடிகளின் வீடுகளில் வெடிகுண்டு சோதனை
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றாா். பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா, சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன், மாவட்டத் தலைவா் சீனிவாசன், டாக்டா் சரவணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.