முல்லைப் பெரியாறு பிரச்ைனையை சுமுகமாக அணுகி இருமாநில
நட்பை கேரள அரசு வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவா்
ஜி.கே.வாசன் கூறினாா்.
மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு சனிக்கிழமை
மாலையணிவித்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தனது உயிா் மூச்சு உள்ளவரை தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தவா் முத்துராமலிங்கத் தேவா்.
அவரை போற்றும் விதமாக மரியாதை செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதரமாக உள்ளது. இவ்விஷயத்தில் நமது உரிமையைப் பாதுகாப்பது தமிழக அரசின் கடமை ஆகும். அதேநேரம், இருமாநிலத்தின் நட்பை கேரள அரசு வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.