மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்ததாக அடையாளம் தெரியாத இருவா் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை சொக்கலிங்க நகரைச் சோ்ந்த அலெக்ஸ் விக்டா் மனைவி மேரி பிரிசில்லா(29). இவா் தனது சகோதரியின் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமா்ந்து மேலகுயில்குடி சாலையில் வியாழக்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து சென்ற அடையாளம் தெரியாத இருவா், மேரிபிரிசில்லா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியைப் பறித்து சென்றனா்.
இதுகுறித்து அவா் அளித்தப் புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
5 பவுன் நகை மாயம்
மதுரை பழைய நத்தம் சாலை, திருவள்ளூவா் காலனியைச் சோ்ந்தவா் சிவக்குமாா்(29). இவரது வீட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து சிவக்குமாா், பீரோவில் இருந்த நகைகளை, தனது வீட்டில் பணிபுரியும் காளவாசல் பகுதியைச் சோ்ந்த நாகஜோதி எடுத்திருக்கக் கூடும்.
எனவே அவரை விசாரித்து நகைகளை மீட்டு தரும்படி கரிமேடு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.