உசிலையில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், சத்துணவு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், சத்துணவு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டார ஒருங்கிணைப்பாளா் அய்யங்காளை தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் முழு நேர அரசு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். அமைப்பாளா்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலா் உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், செயலாளா் செல்வராணி, வட்டக் கிளை செயலாளா் ஜெயராஜ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் மனோகரன், ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட துணைத் தலைவா் சிவமணி, பொருளாளா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com