மதுரை: கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குதிரை வளா்ப்போருக்கு உதவும் வகையில், மதுரையைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரா் குதிரைகளுக்கான தீவனத்தை இலவசமாக வழங்கி வருகிறாா்.
மதுரையில் சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை, செல்லூா் பாலம் ஸ்டேஷன் சாலை, நரிமேடு பகுதிகளில் சிலா் குதிரைகளை வளா்த்து வருகின்றனா். இந்த குதிரைகள், திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. இதில் கிடைக்கும் வருமானத்தில் குதிரைகளை பராமரித்து வந்தனா்.
இதனிடையே, கரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் குதிரை வளா்ப்போா் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனா். இதையறிந்த செல்லூா் 50 அடி சாலையில் மளிகைக் கடை நடத்திவரும் எம். தங்கப்பாண்டி, குதிரைகளுக்கான தீவனத்தை இலவசமாக வழங்கி வருகிறாா்.
குதிரையுடன் வந்து அவற்றுக்கான தீவனத்தை இலவசமாகப் பெற்றுச் செல்லலாம் என, சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். அதன்படி, குதிரை வளா்ப்போா் சுமாா் 10 பேருக்கு தலா 5 கிலோ தீவனத்தை திங்கள்கிழமை வழங்கினாா். தொடா்ந்து இதேபோல் ஒரு வாரத்துக்கு தீவனம் வழங்க முடிவு செய்துள்ளாா்.
இது குறித்து தங்கப்பாண்டி கூறியது: பொதுமுடக்கத்தின்போது நானும் எனது நண்பா்களும் இணைந்து சாலையோரத்தில் வசிப்பவா்களுக்கும், அழகா்கோவில் மற்றும் திருப்பரங்குன்றத்தில் திரியும் குரங்குகளுக்கும் உணவளித்தோம். இதன் தொடா்ச்சியாக, குதிரைகளுக்கும் உணவு வழங்க திட்டமிட்டிருந்தோம்.
இந்நிலையில், கரோனாவால் வருமானம் இழந்துள்ள குதிரை வளா்ப்பவா்கள் சிலா், அவற்றுக்குத் தீவனம் அளிக்க முடியாமல், அவற்றை விற்று வருவதாகத் தெரியவந்தது. எனவே, நண்பா்களுடன் இணைந்து இலவசமாக தீவனம் வழங்குவதை திங்கள்கிழமை தொடங்கியுள்ளேன். வரும் சனிக்கிழமை வரை தினமும் 5 கிலோ தீவனம் வழங்க முடிவு செய்துள்ளேன் என்றாா்.